உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான வேன்கள்.

அவினாசி அருகே 2 வேன்கள் மோதல் - நிதி நிறுவனத்தினர் எடுத்து சென்ற போது விபத்து

Published On 2023-04-02 07:27 GMT   |   Update On 2023-04-02 07:27 GMT
  • வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார்.
  • ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர்.

அவினாசி :

கோவையிலிருந்து அவினாசி நோக்கி ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை டிரைவர் குமரேசன் (வயது 35) ஓட்டி வந்தார். அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையம் அருகே வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார். குமரேசன் வேன் தொடர்பாக பைனான்ஸ் தவணை செலுத்த வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிதிநிறுவனத்தை சேர்ந்த முருகேசன் (32) என்பவர் அந்த வேனை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது எதிரே அன்னூரிலிருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு வேன் மீது மோதியது.

இதில் இரண்டு வேன்களும் பலத்த சேதம் அடைந்தன. ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர். இதனால் ஆட்டையாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News