திருப்பூர் மாநகரில் கஞ்சா சப்ளை செய்த 2பேர் கைது
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா (வயது 41), மங்களம் இடுவம்பாளையத்தை சேர்ந்த தணிகைவேல் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அருள்புரத்தில் பதுக்கி வைத்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.