உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண் உடல்.

மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2022-07-30 14:40 IST   |   Update On 2022-07-30 14:41:00 IST
  • மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் சந்தியா (வயது23). இவருக்கும் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மேலும் இவர்களுக்கு கவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சந்தியா திடீரென சுயநினைவு மாறி மாறி பேசி வந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் தீய அமானுஷ சக்தி தாக்கப்பட்டுள்ளதாக கருதி கோவிலுக்குச் சென்றும், மந்திரம் போட்டும் வந்துள்ளனர்.

ஆனால் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் பிரபாகரன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதால் நேற்று முன்தினம் பிரபாகரன் புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து குழந்தையையும், சந்தியாவையும் அவரது தாய் வீடான மண்டலவாடியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சந்தியா வீட்டில் இருந்தவர் திடீரென காணாமல் சென்றுள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தியாவின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் அரை மணி நேரம் போராடி பாதாள சங்கிலி போட்டு சோதனை செய்தனர். அப்போது சங்கிலியில் மாட்டிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் சந்தியாவை பிணமாக மீட்டனர்.

இதனையெடுத்து ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News