என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery from the corpse in the well"

    • சாவில் சந்தேகம் என புகார்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதிய அத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 34) கட்டிட உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவருக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரகு (40) இவருக்கும் திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர்.

    ரகுக்கும் இந்துமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பெங்களூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15, நாட்களுக்கு முன்பு ரகு முதல் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முதல் மனைவி உடன் வாழ்வதாக ரகு சம்மதம் தெரிவித்ததின் பேரில் இந்துமதியை தனது கணவருடன் வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 31ஆம் தேதி இந்துமதி காணவில்லை இது குறித்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று கிணற்றில் இந்துமதி பிணமாக மிதப்பதை பார்த்த அவரது உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்துமதியின் உறவினர்கள் தாலுகா போலீஸ் நிலையத்தில் இந்துமதி சாவிற்கு ரகு தான் காரணம் என கூறி புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் சந்தியா (வயது23). இவருக்கும் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    மேலும் இவர்களுக்கு கவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சந்தியா திடீரென சுயநினைவு மாறி மாறி பேசி வந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் தீய அமானுஷ சக்தி தாக்கப்பட்டுள்ளதாக கருதி கோவிலுக்குச் சென்றும், மந்திரம் போட்டும் வந்துள்ளனர்.

    ஆனால் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் பிரபாகரன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதால் நேற்று முன்தினம் பிரபாகரன் புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து குழந்தையையும், சந்தியாவையும் அவரது தாய் வீடான மண்டலவாடியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை சந்தியா வீட்டில் இருந்தவர் திடீரென காணாமல் சென்றுள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தியாவின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் அரை மணி நேரம் போராடி பாதாள சங்கிலி போட்டு சோதனை செய்தனர். அப்போது சங்கிலியில் மாட்டிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் சந்தியாவை பிணமாக மீட்டனர்.

    இதனையெடுத்து ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×