என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
- சாவில் சந்தேகம் என புகார்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த புதிய அத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 34) கட்டிட உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவருக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரகு (40) இவருக்கும் திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர்.
ரகுக்கும் இந்துமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பெங்களூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 15, நாட்களுக்கு முன்பு ரகு முதல் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முதல் மனைவி உடன் வாழ்வதாக ரகு சம்மதம் தெரிவித்ததின் பேரில் இந்துமதியை தனது கணவருடன் வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.
கடந்த 31ஆம் தேதி இந்துமதி காணவில்லை இது குறித்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று கிணற்றில் இந்துமதி பிணமாக மிதப்பதை பார்த்த அவரது உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்துமதியின் உறவினர்கள் தாலுகா போலீஸ் நிலையத்தில் இந்துமதி சாவிற்கு ரகு தான் காரணம் என கூறி புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






