உள்ளூர் செய்திகள்
- 10 பாட்டில்களை பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ெரயில்வே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தன்.
மேலும் குமாரை திருப்பத்தூர் கோர்ட்டி ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.