உள்ளூர் செய்திகள்

தீப்பற்றி எரிந்த நாணல் செடிகள்

Published On 2023-08-22 13:38 IST   |   Update On 2023-08-22 13:38:00 IST
  • வீரர்கள் தீயை அணைத்தனர்
  • அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி. இவரது வீட்டின் அருகில் உள்ள ஓடையில் வளரும் நாணல் செடிகள் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட கவுரி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞான ஒளிவு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News