உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற முதியவர் கைது

Published On 2023-03-10 15:03 IST   |   Update On 2023-03-10 15:03:00 IST
  • 5 லிட்டர் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை, மார்ச்.10- ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யில்சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திரியாலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த திரி யாலம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 64) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்த னர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News