உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-09-19 09:59 GMT   |   Update On 2023-09-19 09:59 GMT
  • மேம்பால தடுப்புச்சுவரில் மோதி விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் அடுத்த ஈ.பி. ஆபீஸ் திருமால் நகர் பகு தியை சேர்ந்தவர் செல்வதாஸ் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 27), பெயிண்டர். இவரது மனைவி ரேகா.

இந்த நிலையில் சந்தோஷ் தனது மாமியார் வீடான பாச்சல் ஜெய்பீம் நகருக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார்.

பாச்சல் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள் ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர், பின்னர் மேல் சிகிச் சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News