உள்ளூர் செய்திகள்

சாலையோர பள்ளத்தில் பைக்குடன் விழுந்து வாலிபர் பலி

Published On 2023-08-15 14:37 IST   |   Update On 2023-08-15 14:37:00 IST
  • மேம்பால பணிகள் நடந்து வருகிறது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில்வே மேம்பால பணியின் பில்லர் அமைக்க வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் பில்லர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்த வாலிபரை கயிறு கட்டி வெளியே எடுத்தனர் அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டிலிருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு செல்லவும், இதனால் தனது மோட்டார் சைக்கிளை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு ரெயில் மூலம் திருப்பதி செல்ல இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபெற்று வரும் வழியில் ரெயில்வே மேம்பாலப் பணிக்கு பில்லர் அமைப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து வினோத் குமாரின் தந்தை ஜெயராமன் என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News