உள்ளூர் செய்திகள்

ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் மாயம்

Published On 2023-09-18 08:33 GMT   |   Update On 2023-09-18 08:33 GMT
  • தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென காணவில்லை
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் திருப் பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தி னம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுவன் திடீரென காணவில்லை. சிறு வனை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் திருப்பத்தூர் டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதேபோல் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் திருப்பத்தூர் அருகே சின்னபசலைகுட்டை கிரா மத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவன் காலையில் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளான்.

இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Tags:    

Similar News