search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students are magic"

    • தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென காணவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் திருப் பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தி னம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுவன் திடீரென காணவில்லை. சிறு வனை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் திருப்பத்தூர் டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதேபோல் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் திருப்பத்தூர் அருகே சின்னபசலைகுட்டை கிரா மத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவன் காலையில் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளான்.

    இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 20). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முருகன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார்.

    செய்யாறு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் பிஎஸ்சி முடித்துள்ளார். இவர் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினர்.

    அவர் கிடைக்காததால் அனகாவூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவன். அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடி உள்ளனர். இவர் கிடைக்காததால் இது குறித்து பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த 3 சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
    • போலீசில் புகார்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு இருவரும் சேர்ந்து சென்றனர். பள்ளி முடிந்து 2 மாணவர்களும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். மாணவர்கள் கிடைக்காததால் ஆற்காடு நகர போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே இது போல் மாயமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    ×