search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டதாரி பெண், மாணவன் உள்பட 3 பேர் மாயம்
    X

    பட்டதாரி பெண், மாணவன் உள்பட 3 பேர் மாயம்

    • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 20). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முருகன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார்.

    செய்யாறு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் பிஎஸ்சி முடித்துள்ளார். இவர் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினர்.

    அவர் கிடைக்காததால் அனகாவூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவன். அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடி உள்ளனர். இவர் கிடைக்காததால் இது குறித்து பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த 3 சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×