உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்த காட்சி.

ேஜாதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2022-09-17 12:08 GMT   |   Update On 2022-09-17 12:08 GMT
  • 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது.
  • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

குண்டடம் :

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நகர்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று சேமியா உப்புமா - காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை ரவா-காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல்- காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை சேமியா உப்புமா -காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா - காய்கறி சாம்பாரும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். 

Tags:    

Similar News