உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசுவதையும், அதில் கலந்து கொண்ட விவசாயிகளையும் படத்தில் காணலாம்.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மழை அளவு பாதிக்கும் கீழ் குறைவாக உள்ளது- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

Published On 2023-04-21 09:16 GMT   |   Update On 2023-04-21 09:16 GMT
  • மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • 21 ஆயிரத்து 932 பயனாளிகளுக்கு தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பாளை ஜவஹர் திடல் அருகே உள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட விவசாயிகள் நடப்பு பிசான பருவத்தில் பயன்பெறும் வகையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 47 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரத்து 478 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டுள்ளது.

மண்வளத்தை மேம்படு த்திட குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க 251 குளங்கள் தேர்வு செய்ய ப்பட்டு அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மாவட்டத்தில் 56 கிராம பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ. 62.02 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பயனாளி களுக்கு தென்னங்கன்று, விசை, தெளிப்பான், தார்பாய் உள்ளிட்டவை வழங்கப்ப ட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஓராண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை 181.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 71.88 மில்லிமீட்டர் மழையே பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறு ப்பு) சுகன்யா, வேளாண் இணை இயக்குநர் முருகா னந்தம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) கிருஷ்ண குமார், தோட்ட க்கலை துறை துணை இயக்கு னர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News