உள்ளூர் செய்திகள்

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-08-10 08:37 GMT   |   Update On 2023-08-10 08:37 GMT
  • நாளை நடக்கிறது
  • 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

மேலும் இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

8-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வரும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, ரேசன் கார்டு, சாதிச்சான்று, கல்வித் தகுதி சான்று ஆகியவற்றின் நகல்களை எடுத்து வரவேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை பெற 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News