உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு சாவு

Published On 2023-06-01 09:31 GMT   |   Update On 2023-06-01 09:31 GMT
  • பேனில் புடவையைக் கொண்டு தூக்கில் தொங்கியபடி கிடந்தார்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). இவர் செய்யாறு சிப்காட் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரேவதி (26) மற்றும் மகள்கள் மோனிஸ்ரீ (6), ரக்சயா(3) உள்ளனர்.

நேற்று காலை சிலம்பரசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தைகள் மட்டும் வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளிடம் அம்மா எங்கே என கேட்டதற்கு, உள்ளே தூங்குவதாக தெரிவித்தனர்.

பின்னர் சிலம்பரசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பேனில் புடவையைக் கொண்டு ரேவதி தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News