உள்ளூர் செய்திகள்

மது விற்ற 7 பேர் கைது

Published On 2023-05-28 13:08 IST   |   Update On 2023-05-28 13:08:00 IST
  • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
  • கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

செய்யாறு:

செய்யாறு பகுதியில் டி.எஸ்.பி. வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆதி கேசவன் பகுதியை சேர்ந்த புஷ்பா, சலீம் சுமங்கலி பகுதியைச் சேர்ந்த கோபி, குரு ராம், அல்லியந்தலைச் சேர்ந்த மைதிலி, அனாக்காவூர் சேர்ந்த கோபி, ஏழுமலை ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்து அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து செய்யாறு, மோரணம், பெரணமல்லூர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News