உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூரில் கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது

Published On 2025-06-01 11:15 IST   |   Update On 2025-06-01 11:15:00 IST
  • அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.
  • திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது. ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.

Tags:    

Similar News