உள்ளூர் செய்திகள்
லாரியில் இருந்த பேட்டரிகள் திருட்டு - 4 பேர் கைது
- நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறுகிறது.
- லாரிகளிலிருந்து 6 பேட்டரிகள், ஒரு தார்ப்பாய் உள்ளிட்ட ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா கோவில்பத்தில் ஆசியாவில்இரண்டாவது மிகப்பெரியநெல் சேமிப்பு கிடங்கு உள்ளது இங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் நெல் ஏற்ற வந்தலாரிகள் நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சம்பவத்தன்று தாதன்தி ருவாசல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22), பிரதீப்ராஜ்(18) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளிலிருந்து 6 பேட்டரிகள், ஒரு தார்ப்பாய் உள்ளிட்ட ரூ.58 ஆயிரம்மதிப்புள்ள பொருட்களைதிருடிச் சென்றுள்ளனர்.
புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து தாதன் திருவாசல்ப பகுதியைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர்.