உள்ளூர் செய்திகள்
பஸ் நிலையத்தில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- பஸ் நிலைய பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- போலீசார் மனோஜ் பிரபாகரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெரு மாத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் மனோஜ் பிரபாகர் (23). இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகளில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் மனோஜ் பிரபாகரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.