உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2023-06-23 06:13 GMT   |   Update On 2023-06-23 06:13 GMT
  • சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரிடம் நிறுத்தி விசாரித்தனர்.
  • 3 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆரணி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சூர்யா(23) என்பவரிடம் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் ஏற்கனவே 3 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News