உள்ளூர் செய்திகள்

இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பாதயாத்திரை: விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்

Published On 2023-09-08 05:17 GMT   |   Update On 2023-09-08 05:17 GMT
  • பாத யாத்திரையானது கோட்டார் சவேரியார் பேராலயம் முன்பு தொடங்கி டெரிக் சந்திப்பு அன்னை இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.
  • பாத யாத்திரையில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற பாதயாத்திரை நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கோட்டார் சவேரியார் பேராலயம் முன்பு தொடங்கி டெரிக் சந்திப்பு அன்னை இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர்

மாவட்ட காங்கிரஸ் மண்டல தலைவர்கள் சிவபிரபு, தங்கராஜ், சாந்திரோஸ்லின், ஆதிராம், இளங்கோ, செல்வன், கண்ணன், புகாரி ஆகியோர் முன்னிலையில் பாத யாத்திரை நடைபெற்றது.

பாத யாத்திரையில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News