உள்ளூர் செய்திகள்
மாபெரும் மகளிர் மாநாடு- நிர்வாகிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை
- மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
- மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மற்றும் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் கன்னியாகுமரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஏற்பாடுகள் குறித்து மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மற்றும் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
நாகர்கோவிலில் உள்ள எமது அலுவலகத்திற்கு வருகை தந்த கேரள சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்களுடைய புதல்வனும் ஆன சாண்டி உம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.