உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2023-06-03 06:17 GMT   |   Update On 2023-06-03 06:17 GMT
  • பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் இன்னாச்சி (வயது38). எலக்ட்ரீஷியன். நேற்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடையடுத்து அவர் அருகே உள்ள டிரான்ஸ்பாரம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக டிரான்ஸ்பாரம் அருகே மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து இன்னாச்சி தூக்கி வீசப்பட்டார்.

மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னாச்சியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News