உள்ளூர் செய்திகள்

மருது சகோதரர்களின் 222-வது நினைவு நாள்: சமத்துவ மக்கள் கழகம் மலரஞ்சலி

Published On 2023-10-24 09:49 GMT   |   Update On 2023-10-24 09:49 GMT
  • மருது சகோதரர்களின் படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • ஏராளமான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

சென்னை:

மருது சகோதரர்களின் 222-வது நினைவு நாளான இன்று சமத்துவ மக்கள் கழகம் சார்பாக கிண்டியில் அமைந்துள்ள அவர்களது சிலைக்கு அருகே உள்ள படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் பொருளாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ஜெபராஜ் டேவிட், ஆர்.கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் சாமுவேல், வட சென்னை மாவட்டத் துணைச் செயலாளர்கள் தாஸ், சதீஷ், ஆனந்தலிங்கம், ஆர்.கே. நகர் பகுதி நாடார் பேரவை செயலாளர் பாக்யராஜ், திருவொற்றியூர் பகுதி துணைச் செயலாளர் அன்பரசன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News