உள்ளூர் செய்திகள்

மீஞ்சூரில் அரிசி கடையை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை

Published On 2023-07-07 12:07 IST   |   Update On 2023-07-07 12:07:00 IST
  • கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
  • கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் பஜார், வேளாளர் தெருவில் அரிசி கடை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடை மூடிவிட்டு சென்றார்.

காலையில் கடையில் வேலை செய்து வரும் முருகன் என்பவர் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News