திருவள்ளூர் அருகே மதுபோதை தகராறில் ரவுடியை வெட்டிக்கொன்ற நண்பர்கள்
- மது அருந்த தின்பண்டம் வாங்குவது தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
- ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தொட்டிகலை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது30). இவர் மீது வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை, 2 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன.
அவர், நண்பர்களுடன் சிறுகடல் மதுபானக்கடை அருகே உள்ள வேப்பமரத்து அடியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது மது அருந்த தின்பண்டம் வாங்குவது தொடர்பாக அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க துணை கமிஷனர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.