உள்ளூர் செய்திகள்

திருமழிசையில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2022-09-08 07:46 GMT   |   Update On 2022-09-08 07:46 GMT
  • மனவேதனையில் இருந்து வந்த வாலிபர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருமழிசை பிரையாம்பத்து ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (27). இவரது நண்பர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இறந்து விட்டதால் மிகவும் மன உளைச்சல் அடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இதனால் மனோகரனை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோகரன் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News