பாளையில் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: பணியிட மாற்றம் காரணமா? - விசாரணை
- செந்தூ குமாரை மதுரை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வந்தது தெரியவந்தது.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை மகாராஜநகர் வேடவர்காலனியை சேர்ந்தவர் செந்தூர் முருகன் (வயது 55). இவர் பாளை சி.பி.சி.ஐ.டி.யின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று காலை வீட்டில் விஷம் குடிந்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் நேற்று முன்தினம் செந்தூ குமாரை மதுரை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக செந்தூர் குமார் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.