உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்

Published On 2023-03-03 14:55 IST   |   Update On 2023-03-03 14:55:00 IST
  • கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த அதே வாலிபர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளரையும் மிரட்டி தப்பி சென்று விட்டனர்.
  • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு இரவு பெட்ரோல் பங்க்கை மூடிய பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் தங்களது வாகனத்துக்கு பெட்ரோல் போடும்படி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்த ஊழியர்களை தாக்கி சென்றனர். சிறிது நேரம் கழித்து கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த அதே வாலிபர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளரையும் மிரட்டி தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News