உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் அருகே வறுமையில் விஷம் குடித்த தாய்-மகள்

Published On 2022-07-24 05:10 GMT   |   Update On 2022-07-24 05:10 GMT
  • குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
  • குட்டி ராணியின் மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்சிகாபுரம் அரண்மனைக்காரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவரது மனைவி குட்டிராணி (45). இவர்களுக்கு கலைவாணி (22) உள்பட 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நாகராஜ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் மனமுடைந்த குட்டிராணி 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றினர்.

குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அறிந்த அவரது மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 21-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கலைவாணி நேற்று பரிதாபமாக இறந்தார். குட்டி ராணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து குட்டி ராணியின் தாய் மாமா செந்தில்குமார் என்பவர் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News