உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த பைனான்சியர் தற்கொலை

Published On 2024-01-05 09:30 GMT   |   Update On 2024-01-05 09:30 GMT
  • மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
  • கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசிமுத்து (வயது 56). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி மருதம்மாள் (54). இவர்களது மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்னாசிமுத்து மற்றும் அவரது மனைவி மருதம்மாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இன்னாசிமுத்து மனைவியை வெட்டிக்கொலை செய்தார்.

நேற்று காலை இன்னாசி முத்து வீட்டுக்கு சென்ற மருதம்மாளின் தம்பி சின்னமருது, சகோதரி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இன்னாசிமுத்துவிடம் தட்டிக் கேட்டார்.

அப்போது அவரையும் இன்னாசி முத்து அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.

இந்நிலையில், பாண்டவர்மங்கலம் அருகே மயங்கி நிலையில் இன்னாசிமுத்து கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு இன்னாசிமுத்துவும் விஷம் குடித்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.

Tags:    

Similar News