உள்ளூர் செய்திகள்

மூலைக்கரைப்பட்டியில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை

Published On 2023-08-26 14:28 IST   |   Update On 2023-08-26 14:28:00 IST
  • 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார்.
  • மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 44). இவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி இந்திராகாந்தி(42). இவர் களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கார்த்திக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து ள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார். இதில் அரவது கையில் நரம்பு அறுபட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவரது கை செயல் இழந்தது. இதையடுத்து அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூலக்க ரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News