உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசினார்.

தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டம்

Published On 2023-07-27 13:49 IST   |   Update On 2023-07-27 13:49:00 IST
  • உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
  • குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

வேதாரண்யம்:

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசிய விபரங்கள் வருமாறு:-

முத்துலட்சுமி (அ.தி.மு.க):

கொளப்பாடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மணல்களை டிராக்டர்களில் ஏற்றி செல்லும் போது சாலைகளில் கொட்டுவதால் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

அதனை சரி செய்ய வேண்டும்.

ரம்யா (அ.தி.மு.க.): பண்ணத்தெரு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

செல்வி சேவியர் (தி.மு.க.):

நீர்முளை ஊராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.

மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

தலைஞாயிறு பகுதிக்கு காவிரிநீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

தீபா (அ.தி.மு.க.):

அவரிக்காடு ஊராட்சியில் மயான சாலைக்கு செல்லும் வழியில் ஆற்றில் உள்ள மரப்பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.

மாசிலாமணி (தி.மு.க.):

வானவன்மகாதேவி பகுதியில் பிலாற்றங்கரை செல்லும் சாலையை செப்பணிட வேண்டும்.

உதயகுமார் (தி.மு.க.):

நாலுவேதபதி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

இதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசுகையில்:-

உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதிநி லைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

முடிவில் அலுவலக மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News