சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி கணேஷ்.
நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சாவு
- வள்ளி கணேஷ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
- படுகாயம் அடைந்த வள்ளிகணேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நெல்லை:
பாளை குலவணிகர்புரம் பாண்டித்துரை 3-வது தெருவை சேர்ந்தவர் வள்ளி கணேஷ் (வயது 53). இவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் அருகே சென்றுக் கொண்டிருந்த போது திருச்செந்தூர் அருகே உள்ள பரமக்குறிச்சி வெள்ளாளன்விளையை சேர்ந்த செந்தூர்பாண்டி (43) என்பவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். லாரி டிரைவரான அவர் மீது வள்ளிகணேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த வள்ளிகணேஷ் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்க ப்பட்டார். அங்கி ருந்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.