உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் - பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அதிரடி உத்தரவு

Published On 2022-06-18 06:06 GMT   |   Update On 2022-06-18 06:06 GMT
  • பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும்.
  • கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் :

திருப்பூரில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி பேசியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவது அவசியம். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைதோறும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் பாட வாரியாக வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். இதுதவிர தினமும் காலை, 8:30 மணிக்கும், மாலை 4:15 முதல், 5:30 மணிக்குள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம்.

பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும். வகுப்பாசிரியர்கள் 'வாட்ஸ்அப்பில்' மட்டுமே தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு தகவல்கள், செய்திகள் அனுப்பப்படுவது தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தரப்பில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் புகார் பெட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் வருகை சார்ந்த விவரம் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆசிரியர் மானியம், பிற பணப்பயன்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு, சுகாதார சான்று ஆகியவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மிதிவண்டி, லேப்டாப் சார்ந்த இருப்பு பதிவேடுகள், சிறப்பு நிலை, தேர்வுநிலை, தகுதிகாண் பருவம், பணிவரன்முறை சார்ந்த ஆசிரியர்களின் கருத்துருக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பிற அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, நிரந்தர சிகிச்சை பெறுவோருக்கு விபத்து காப்பீடு, உதவித்தொகை பெற ஆவண செய்தல் வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் பட்டியலை தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த மாதாந்திர கூட்டத்தில் இதுசார்ந்த விவரங்கள் கேட்கப்படும். எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இவற்றை நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலெக்டர், மற்றும் உயர்கல்வி அதிகாரிகள் பார்வையிட வரும்போது கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

Tags:    

Similar News