உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் விநியோகம் நிறுத்தம்

Published On 2022-06-24 10:23 GMT   |   Update On 2022-06-24 10:23 GMT
  • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நோட்டு விநியோகம் நிறுத்தப்பட்டது.
  • நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம்:

அரசு, அரசு உதவி ெபறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் 14 வகையான இலவச திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன்படி புதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த 13-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திய பிறகும் அவற்றை குறிப்பெடுக்க நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஆணையரகம் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தில் தயாராகும் நோட்டு புத்தகங்களை பள்ளிகளுக்கு வாங்குவதற்கும், உரிய வழிகாட்டுதல் அளிக்காததால், இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்கள் பாட அம்சங்களை குறிப்பெடுத்துக்கொள்ள நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News