உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே மர்மான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்

Published On 2022-08-22 09:57 GMT   |   Update On 2022-08-22 09:57 GMT
  • விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
  • அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.

மேட்டுப்பாளையம் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துரை, அகத்தியர் பீடம், ஊட்டி-குன்னூர் சாலை, கல்லார் காட்டேஜ் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கடமான், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடியும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.அப்படி வரும் போது விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.


இந்த நிலையில் அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதை விசாரிப்பதற்காக வந்த தாசில்தார் மாலதி பார்த்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமானை கைப்பற்றினர். இந்த பகுதியில் 20-க்கும் ேமற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் நாய்கள் கடித்ததில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் நாய்கள் கடித்ததால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் 3 மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News