உள்ளூர் செய்திகள்

பிக்கிபுளோ கோயம்புத்தூர் சார்பில் ஆன்மிக கலந்துரையாடல் நிகழ்ச்சி

Published On 2023-10-30 14:41 IST   |   Update On 2023-10-30 14:41:00 IST
  • பலவீனத்தை பலமாக்குவதே நமது இலக்கு
  • பிரம்மகுமாரிகள் அமைப்பை சேர்ந்த ஷிவாணி பேச்சு

கோவை,

கோவையில் உள்ள தனியார் ஓட்டலில், பிக்கி புளோ கோயம்புத்தூர் சார்பில் ஆன்மிக கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மிக தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

பிரம்மகுமாரிகள் அமைப்பை சேர்ந்த சகோ தரி கோதை பேசுகையில், சூரிய ஒளி முன்னால் உள்ள மெழுகுவர்த்தியாக நான் உணர்கிறேன். சகோதரி ஷிவாணி நொடிப்பொ ழுதில் முடிவை எடுக்கும் திறன் கொண்டவர். இந்த அரங்கில் அவர் நுழைந்த தும், அமைதியும் தெய்வீக மும் நிரம்பியது. அவருடன் நடந்த ஒவ்வொரு உரையா டலும் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

பிரம்மகுமாரிகள் அமை ப்பை சேர்ந்த சகோதரி பி.கே ஷிவாணி பேசியதா வது:- எனது மனதின் அரசன் நான். ஒவ்வொரு எண்ணமும் எனது விருப்ப த்தின் பேரிலேயே உருவாக வேண்டும். அமைதியும், நிலைத்தன்மையையும் கொண்டுள்ளேன். செல் போனின் ஓசை என்னை எவ்விதத்திலும் சிரமப்ப டுத்தாது. நான் ஒரு ஒளி மிகுந்த வலிமையான இல்லம். மக்களை வலிமை ப்படுத்தும் வலிமை என க்குள் உண்டு. இது தான் எனது ஆளுமை.

வெற்றி பெற்ற மாணவர்கள், தோல்வியுற்ற மாணவர்கள் என முத்திரை குத்துகிறோம். நாம், வெற்றி பெறும் மக்களின் திறனை வைத்து முன்னுரிமை அளிக்கிறோம். பலவீ னத்தை பற்றி கவலைப்படு வதில்லை. பலவீனத்தை பலமாக்குவது தான் நமது இலக்காக இருக்க வேண் டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் எப்.ஐ.ஓ., கோவை யின் தலைவர் மற்றும் கங்கா ஸ்பைன் மருத்துவ மனையின் தலைவர் ரமா ராஜசேகர் மற்றும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News