உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- அம்மனுக்கு மஞ்சள் பால், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.
பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டனர்.