உள்ளூர் செய்திகள்

நாளை கந்து வட்டி புகார்களை விசாரிக்க சிறப்பு முகாம்

Published On 2022-07-27 05:58 GMT   |   Update On 2022-07-27 05:58 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
  • காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News