உள்ளூர் செய்திகள்

சி.பா.ஆதித்தனாரின் சமூகப் பணிகளை போற்றுவோம்- அன்புமணி ராமதாஸ்

Published On 2023-05-24 08:14 GMT   |   Update On 2023-05-24 08:14 GMT
  • தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று.
  • தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை சி.பா. ஆதித்தனார் செய்தார்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று. தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் தான் அவரது இரு முதன்மை நோக்கங்களாக இருந்தன.

தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை அவர் செய்தார். அவரது நினைவு நாளில் அவரது சமூகப் பணிகளை போற்றுவதுடன், அவற்றை நாமும் தொடர உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News