உள்ளூர் செய்திகள்

தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நிதி உதவி - தட்சணமாற நாடார் சங்கம் வழங்கியது

Published On 2023-05-11 14:59 IST   |   Update On 2023-05-11 14:59:00 IST
  • பாளையங்கோட்டை தாலுகா கான்சாபுரம் தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). பனை ஏறும் தொழிலாளி.
  • இவர் கடந்த மாதம் நுங்கு வெட்ட பனை ஏறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

நெல்லை:

பாளையங்கோட்டை தாலுகா கான்சாபுரம் தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் நாடார் மகன் சுரேஷ் (வயது 21). பனை ஏறும் தொழிலாளி. இவர் கடந்த மாதம் நுங்கு வெட்ட பனை ஏறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

பின்னர் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது வருமானமின்றி வீட்டில் கஷ்டப்படுவதாகவும், எனவே சங்கத்தில் இருந்து உதவி கேட்டும் மனு கொடுத்திருந்தார்.

அவரது மனுவை நிர்வாக சபை கூட்டத்தில் பரிசீலித்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அவருக்கு நலிந்தோர் நலநிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் வழங்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமையில், செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலையில் சுரேசின் தந்தை பெருமாள் நாடாரிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் நிர்வாக சபை உறுப்பினர் ஏ.நயினார் நாடார் கலந்துகொண்டார்.

Tags:    

Similar News