உள்ளூர் செய்திகள்
- பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.