உள்ளூர் செய்திகள்

மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-04-18 08:14 GMT   |   Update On 2023-04-18 08:14 GMT
  • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
  • திரளானோர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை

மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் சித்திரை சோம வார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கொடி மரம் முன்உள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதேபோல் இக்கோவில் பின்புறம் உள்ள சிருங்கேரி சங்கரமடம், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் காசி நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கங்கை தீர்த்தம் அபிஷேகம் நடைபெற்றது.

இடைக்காட்டூர் மணி கண்டஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவி லிலும் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News