தேவகோட்டையில் தனியார் பஸ்களில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
போக்குவரத்து விதிகளை மீறிய தனியார் பஸ்களுக்கு அபராதம்
- தேவகோட்டை நகரில் போக்குவரத்து விதிகளை மீறிய தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்ட்டது.
- ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.
தேவகோட்டை
தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் தனியார் பஸ்கள் விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று காலை நகர் காவல் ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கரிகாலன், மைக்கேல் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 தனியார் விதிகளை மீறிய பஸ்களை நகர் காவல் நிலையம் கொண்டு வந்து அந்த பஸ்களுக்கு ஏர்ஆரன், போக்குவரத்து விதிமீறல், நோ பார்க்கிங் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது ஆய்வாளர் சரவணன் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் நகருக்குள் அதிவேகத்தில் பஸ்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்