உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் ஒன்றியங்களில் கலெக்டர் மதுசூதனரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-07-17 08:21 GMT   |   Update On 2022-07-17 08:21 GMT
  • திருப்பத்தூர் ஒன்றியங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
  • மனுவாக பெற்றதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றி யங்களில் உள்ள வட்டா ட்சியர் அலுவலகம், கீழ செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் மதுசூதனரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் வட்டாட்சியர் வெங்கடேசனிடம் அலுவலகத்தில் நாள்தோறும் பொதுமக்கள் தரும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக பெற்றதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், வருகை பதிவேடுகள் குறித்தும் பார்வையிட்டார். நிலுவை யில் உள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் கணேஷ் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.பின்பு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒன்றி யங்களில் நடைபெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மண்டல துணை வட்டா ட்சியர் செல்லமுத்து, சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் சிவசம்போ, தனி வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News