உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-09-22 07:13 GMT   |   Update On 2022-09-22 07:13 GMT
  • திருப்பத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
  • 8 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு வாட்ஸ்ஆப் குரூப் மூலம் தகவல்களை பரிமாறி குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார். மேலும் 18 வயது வரை உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், 24 மணி நேர இலவச தொலைபேசி எண் 1098, அவசர போலீஸ் எண் 100, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 04575240166 அறிவிக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News