உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது
- தட்சிணாமூர்த்தி 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
- சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பெரிய நெல்லிக்காய் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 63). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் போக்சோ சட்ட த்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி கைது செய்தனர்.